Sunday, December 9

அன்னைத் தமிழின் இன்றைய நிலை (எழுத்தோலை, கவிதை திருவிழா)


Dec`04

தொன்மை சங்கத்தமிழ் மொழியும்,

தனித்தன்மை கொண்டே இருந்திடவே,
பொதுமைப் பண்பு, நடுவு நிலைமை
இரண்டாம், மூன்றாம் தகுதியில் சேர்ந்தே,

தாய்மைத் தன்மை தனித்துவத்தில்,
பண்பாடு, கலை, பட்டறிவு -
வெளிப்பாடு இணைந்தே, பிறமொழிக்
கலப்பில்லாத் தனித்தன்மையும் கொண்டே,

ஈடு இணையில்லா இலக்கிய வளம்,
உயர்சிந்தனை, கலை, இலக்கியத்
தனித்தன்மை வெளிப்பாடு,
மொழிக் கோட்பாடு என்றே,

பதினொன்று தகுதிகளும் தன்னிடத்தே
கொண்டு - உலகில் உள்ள ஆறாயிரத்து
எண்ணூறு மொழிகளில் தனி மொழியாய்,
நம் தமிழ் மொழியும், செம்மொழியாய் ஆனதோ?

பெருமை பீறிட செய்யும் கேட்டிடவே,
நீயும் தமிழனாய், தமிழ் பேசுபவனாய்,
உலகை வளம் வரும் ஒவ்வொரு நொடியும்,
உரக்க சொல்லிடு தமிழ், தமிழ், தமிழென்றே,

அதனை விடுத்து, கள்ளக் காதலர்ப் போல்,
தமிழை ஆங்கிலத்துடன் அறை நிர்வாண
படுத்தி - அதன் அழகையும், ஆற்றலையும்,
அதற்கென்றிருக்கும் தனித்தன்மையையும்,

களங்கப் படுத்தாமல், மேலும் அதன் புகழ் -
தழைத்தோங்க உதவிடு, உறுதுணையாய் இருந்திடு.


எழுத்தோலை!

No comments: