Saturday, December 29

அமைதியாய் உறங்குப் பெண்ணே!


தீப்பிளம்பினும் கொடியது,
மரணம்,
பூங்கோடியவள் அதை
தழுவிட்டத்தருணம்,
இடி, மின்னல், மழை,
வானில் மட்டும் அல்ல,
எங்கள், இதயங்களிலும்
இடைவிடாத சலனம்,

இது இயற்கையின்
சீற்றம் அல்ல,
காமக் கயவர்களினால்
நேர்ந்த,
கொடுமையின் உச்சக்
கோரத்தாண்டவமே,

மீளாத் துயருக்கு,
எங்களை ஆளாக்கிவிட்டு,
கடவுளாகிப் போன
எங்கள் வீட்டுப் பெண்ணே,

உன்னோடு சேர்த்து - இந்த
கொடுமைதனைக் கொளுத்துவோம்,
இனியும் என்றும்,
வேண்டவே வேண்டாம்,

இன்னொருப் பாவச்செயல்,
இன்னொரு மரணம்,
இன்னொருத் துயரத்தருணம்,

அமைதியாய் உறங்குப் பெண்ணே,
உன்னாலே இந்த உலகம் மாறும் நம்பு.



எழுத்தோலை!

No comments: