Sunday, December 9

எவரேனும் சிந்தித்ததுண்டா?


Nov`15
 
குப்பைகள் படர்ந்த
தெருக்களில், பனிக்கால
மூட்டம்ப் போல், அடர்ந்த
புகைக்குள் இருந்து,
நானும் இருமியப்

படியே கடக்கிறேன்,

எங்கே கண்ணிவெடி,
எவரேனும் வைத்தனறோ,
என்னும் சலனம் லேசாய்
என்னுள் எழும்பி மறைய,
கால் எடுத்து வைத்து,
பார்த்து, பார்த்து
நடக்கிறேன்,

கொட்டாங்குச்சியில்
மறைத்து வைத்த அணு
குண்டு, எனக்கெப்படித்
தெரியும், தெரியாமல்
சென்றுவிட்டேன் அருகில்,
அலறியப்படி ஒருவர்
பார்த்து அங்கே .....,
சொல்லிமுடிப்பதற்குள்,
வெடித்துச் சிதறுமோ,
கொட்டாங்குச்சி
சில்களாய் தெறிக்குமோ,
சறுக்கி, வழுக்கி
ஒருவழியாய் முழிப்
பிதுங்கி நிற்கிறேன்,
மீண்டும் நடையை
தொடங்குகிறேன்..,

ஏவுகணை கண்டறிந்த
விஞ்ஞானிகள் போலே,
எதிர் வீட்டு ஜன்னலை
இலக்காய் ஏவும் ஒருவன்,
குடிசைகள் நிறைந்த
பகுதியை பதம்ப்
பார்க்கும் சிறுவன் ,
பார்த்துக் கொண்டே
பீதியில் படபப்புடன்
நகர்கிறேன்..

ஐயோ தீ!
பத்தி எரியுதே,
காப்பாத்துங்க ...
அலறல் எதிரொலிக்க,
ஓட்டமாய் கூட்டம்,
தீயணைப்பு வண்டி
வந்துசேர வழிக்
கிடைக்கா தவிக்க,
தரைமட்டம் ஆகிப்
போன பத்துக்கு,
பத்தே இருந்த,
பல நூறு குடிசை
கூட்டங்கள்,
சோர்கிறேன்..,

நின்றுப் போன பட்டாசு
சத்தமாய் ஒரு அமைதி,
நெஞ்சுக்குள்,

மேலெழும்பி வெடிதிதுச்
சிதறி - பூப்பூவாய்,
சிவப்பு, நீல, பச்சை
கலவையில் நெருப்புச்
சிதறல்கள் - கண்ணிமைக்கும்
நேரத்தில்,
கண்மறைந்து போகுமோ?

அரைமணிநேர
ஆனந்தம்,
புஸ்சென போன
குருவி வெடியாய்,
ஏமாற்றி போனதே
ஆயிரம், ஆயிரம்
ரூபாயை..,

எந்த புராணத்தில்
வெடி, வெடிக்க
சொல்லியிருக்கு?
எந்த இதிகாசத்தில்
தீபாவளி தமிழனுடைய
பண்டிகை என்றிருக்கு?

காற்றை மாசாக்கி,
காசை கரியாக்கி,
அப்படியொன்றும்
புதிதாய் ஒரு நல்ல
நேரம்,
யவர் வாழ்விலும்
பிறந்ததாய் தெரியவில்லையே,
இன்றுவரை.

எவரேனும் சிந்தித்ததுண்டா?



எழுத்தோலை!

No comments: