Sunday, December 9

மாறாமல் தோற்றே!


Nov`25

பறக்க நினைத்து
விழுந்து எழுவதும்,
இறக்கை விரித்து
இறங்கி நடப்பதும்,
விழிக்க மறுத்து

தூங்கி வழிவதும்,

பிழைப்பைக் கெடுக்கும்
நினைப்புகளோ - இல்லை,
மனமென்னும் குரங்கின்,
கிளைத் தாவல்களோ,

மனிதன் குரங்கிலிருந்து
தாவா, தாவி மரக்கிளைகளை,
நிரப்புகிறான் - அங்கும்
இருக்க மனமின்றி,
மீண்டும் தாவுகிறான்,

மாறி, மாறி - மாறாமல்,
தோற்றே!
 
 
எழுத்தோலை !

No comments: