Tuesday, December 18

அள்ளிக்கொண்டு போவாயோ மாயனே!


உலகம் உருண்டையாய் உருள,
உள்ளுர நீரும், மணலும், மலைகளும்,
செடிகளும், பறவைகளும்  மரங்களும்,
மக்களும், மாக்களும், மண்டிக் கிடக்க புதர்களாய்,

புவி என்று பெயர் சூட்டி - பூகோள
வரைப் படம் தீட்டி, கோடிட்டு
வேலியமைத்து, என் நாடு - என்
இனம், என் நிறம், என் மொழி,
என் மதம், என் சாதி என்றே - பாதி,
பாதியாய் அக்குவேராய், ஆணி வேறாய்,
ஆங்காங்கே அடித்துக் கொண்டிருக்க,

அனைவரையும் சேர்த்து வைக்க,
ஒன்று சேர வழி வகுத்த - மாயன்,
மாயமே செய்திருக்க வேண்டும்,
இன்றோ, அனைவரும் அவன்
பெயரையே உச்சரித்தே - உருகி
உருகி வேண்டுவறோ ஒற்றுமையாய்,
உயிர் வாழ ஆசைக் கொண்டே.

எனக்கு மட்டும் ஏனோ, அந்த ஆசை
இதுவரை இல்லை - அள்ளிக்கொண்டு
போவாயோ மாயனே என்னை?


எழுத்தோலை!

No comments: