Sunday, December 9

நீல மயில் கழுத்துக்காரி!


Nov`22

நீல மயில் கழுத்துக்காரி,
நில்லடி கொஞ்சம் - என,
சொல்லி கெஞ்சும் எனது,
சொல்லை கேட்டும் - ஏனடி,
நின்றும், நில்லாமல் எனை,

கொள்ளாமல் கொள்கிறாய்?

தண்டனைக் கைதி, கண்ணால்
ஆவேனோ - உன் கண்ணாலே,
நானும் காணாமலே போவேனோ,
கொண்டைப்பூவும் சிரிக்குதடி,
கொடியிடையும் அழைக்குதடி,
குமரி முனை வள்ளுவனும்,
சொல்லியப்படிஉனையென்று,
அள்ளியப்படி தூக்கிப் போவேனோ?

தூங்காமல் துன்பம்,
தாங்காமல் இன்பம்,
வாங்காமல் இதயம்,
ஏங்காமல் இமயம்,
இதையும், எதையும்,
எனக்கென்றொரு வாழ்வும்,

கொடுப்பாயோ காதலியே,
கனவில், தினமும் நான் காணும்,
உருவமில்லா ஊர்வசியே.?



எழுத்தோலை!

No comments: