Sunday, December 9

தமிழ் வழிக் கல்வி ..( "எழுத்தோலை, கவிதை திருவிழா" )


Dec`03


குப்பாயம் அணிந்து,
தலைக் கவிழ்ப்பு கவிழ்த்து,
கழுத்து முடிச்சி தொங்கல் கூட,
நுனி நாக்கில் மூங்கில் நீள,
உரையாடல் நடமாட - நாகரீக
உலகில் இன்றைய ஆங்கிலத் தேவை,

அம்மையும், அப்பனும் ஊட்டிய
சோறும் - நெய்யும், பாலும் தானே,
தெரிந்தே மறுத்த ஊட்டச் சத்தும்,
தமிழென்ற தயக்கம் ஏனோ,
ஒட்டியே பிறந்த கண்கள் இரண்டோ,
தன் கையாலே யவரும் குத்தியதுண்டோ,

தாய்மொழி தமிழாய் இருக்க - தவிர்த்து
விட முனைந்துவிடும் தமிழா,
சகட்டுமேனிக்கு வாழ்வதை நிறுத்து,
சாக்கடையில் புரளுது உன்னுடைய சிறப்பு,
சந்தர்ப்ப ஆங்கிலம் தேவையை பொருத்து,
தமிழ் மட்டும் தானே அளவில்லா சொத்து,

தரணியெங்கும் தழைத்தோங்கும்,
செந்தமிழ் செம்மொழியும்,
உலக சந்தையில் நுழைந்து - அங்கே
உள்ளோர் சிந்தையில் எல்லாம் பதிய,
சீர்க்கல்வி கற்றுக்கொடு - அதுவும்,
தமிழ் வழிக் கல்வி முறையில், இனியேனும் தயங்காமல்.

அறிந்திடு, அறியாமையை அகற்றிடு, கற்க உதவிடு,
வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ் !!


எழுத்தோலை!


( குப்பாயம்: ஆங்கிலேயர் அணியும் மேலாடை, குளிரிலிருந்து காக்க,
தலைக் கவிழ்ப்பு: தொப்பி/ குல்லா,
கழுத்து முடிச்சி தொங்கல்: கழுத்தில் தொங்கவிடும் துணியினால் ஆனா
ஆடை, ஆங்கிலத்தில் TIE என்பர்)

No comments: