Saturday, December 29

பெண்மையை காப்போம்!


சிற்றின்பம் தேடும்,
மனிதனும் ஏனோ,
பாவங்களைச் செய்ய
பயப்படுவது இல்லை,

அன்னை வயிற்றில் பிறந்தும்,
அக்காள், தங்கையுடன் வாழ்ந்தும்,
மனைவி, தோழிகளுடன் இருந்தும்,
மகளும், பேத்தியும் கண்டும்,

மாக்களைப் போல் மாறுவானேன்,
ஈவு, இறக்கம் துளியும்,
இல்லா அரக்கன் அவனே,
இச்சைக்கு வெறிக்கொண்டு அலைந்து,

பச்சைப் பிள்ளை என்றும்,
பகுத்தறிவு இன்றி - நாய்களாய்,
கூடப் பிறந்தவளையும்,
நடுத்தெருவில், பலவந்தம் புரிவானோ?

நாகரீகம் மறந்து,
நயவஞ்சக காம, சோம பான,
அரக்கன்ப் பிடியில்,
அடிமையாய் சிக்கி,

பார்க்கும் பெண்ணையெல்லாம்,
படுக்கையில் கிடத்திட துடித்து,
பாவம் மேல் பாவம் சேர்த்து,
உயிரையும் எடுத்திட துனியும்,

துனியும் நீயும் இனியும் - ஒருத்
துளியும் இவ்வுலகில் இருந்திடவே,
தகுதியும் இழந்து - நடுத்தெருவில்
ஆயிரம்பேர் மத்தியில்,

கழுத்தை இறுக்கி நெரித்தாலே,
பயம் கொண்டு எவனும்,
பார்வையினால் கூட எவரையும்,
வன்புணர்தல் முற்றும்.

பெண்மையைப் போற்றுவோம்,
பெண்மையை காப்போம், 




எழுத்தோலை!

http://www.youtube.com/watch?v=awDwlGWCrxg&feature=youtu.be


No comments: