Sunday, December 9

ஐக்கூ !


Nov`26

ஐகூ கவிதைகள்:
-----------------------



1. மாநகர தெரு விளக்குகள்! (Street Lamps in Chennai)
-------------------------------------------------------
--------------------------------------

விடிந்தும்,
அனையமறுக்கும்
மஞ்சள் நிலவுகள்.


2. காக்கை ர(ரா)கம்! (Crows' vocalizations)
----------------------------------------------------

கரைவதும் ஒரு சுகம்,
அதில் நனைந்திடும்
பிணைக்கு.


3. சாவி! (Key)
------------------

துளை சேரா,
நுழைய வழிக்
கொடுக்காத பாவி.


4. கடிகார முட்கள்! (Clock Thorn)
------------------------------------------

குத்திடும் முள்,
சுத்தி காட்டிடும்
தருணம்.


5. கரிக்கோல் முனை! (Pencil Tip)
-------------------------------------------

சீவிட, சீவிட,
கொட்டிட செய்யும்
எண்ணங்களை.


6. நிலைக்கண்ணாடி! (Mirror)
--------------------------------------

சின்னதாய் பொய் சொல்லி,
தன்னெதிர் நிற்பவரை - அனந்த
மழையில் நனைக்கும்.


7. அலைப்பேசி! (Mobile)
--------------------------------

கை மடக்கி, திறந்து
பார்த்தேன் - உள்ளங்கையில்
ஓர் உலகம்.


8. சாராயம்! (Liquor)
--------------------------

ஊமையையும் பேசவைக்கும்,
உலகமதை சுற்றிக் காட்டும்,
ஊற்றில் கிடைக்காத நீர்.


9. தமிழக மின்! (TNEB)

சில நாட்களாய், ஒடுக்காளி
பட்டம் பெற்ற - ஒளிகொடுக்கும்
சக்தி.


10.தானியங்கி படிக்கட்டு (Lift / Stair Cases)
_________________________________________


ஏற்றிவிட்டவனையும்,
இறக்கிவிடும் - இரக்கம்
இல்லா இதயம்.


11. சீப்பு! (Comb)
---------------------

சாலை செப்பனிட
முட்களும் உதவுமோ,
முகத்திற்கு மேல் தாவுமோ.



எழுத்தோலை!

No comments: