Tuesday, December 18

பிடித்திட முடியவில்லை!


Dec`17

நிலவும் தேய்ந்திட, தேய்ந்திட,
வளரும் நாளும், நாளும் எல்லாம்,
வெளிச்சம் கூடி ஒளிர்ந்திடுமோ,
வானமும், மேகங்களூடே உனது,
கன்னங்கள் அதன் குழிகளில்,

பதிந்து, புதைந்து, மறைந்து, மிதந்திடும்
புகைக் கூட்டம், கலைந்திடா வரையில்,
என் கற்பனை சிறகடித்து அதில் பறந்திடும்,

நீ என்னை விட்டு பறந்திட்ட நொடியும்,
இன்னும் என் எண்ணங்கள் ஏனோ - அதன்
விளிம்பில், சட்டையின் நுனியில் சிக்கியே,
கிழிந்து, கீழே விழுந்திட, எத்தனித்தே இழுக்கிறதே,

மெல்ல அதன் நினைவுகள் - ஆவின் வாய்
சிக்கிய சக்கையாய் - அசைந்து, அசைந்து,
அசைப்போட்டு என்னை - அசைய விடா,
இருக்க கழுத்தை இறுக்கி நெறிக்கிறதே,

கயல்விழி, நீயும் ஏனோ என் கா(த)ல்களை(லை),
முறித்தாயோ, கட்டைக்கால் பிடித்தே,
எக்கி, எக்கி நடக்கிறேன் பிடிக்கவோ,
பிடிக்கொடுக்கவோ இல்லை - தாங்கி
நடக்கவோ, இன்னும் என்னால்,
(ஆ)தாரம் (கைப்) பிடித்திட முடியவில்லை.



எழுத்தோலை!

No comments: