Sunday, October 26

என் செல்ல மருமகளே, "3சா"

11th Oct 2013

எப்பொழுதும் மழை என் நெஞ்சில்
எப்பொழுதும் மழை என் நெஞ்சில்
மழலை இவள் மொழிக் கொஞ்சல்-தனை
நிதம் கேளாதிருந்தும் எதிர் ஒலிக்கும்
என்றுமென் செவி அதனில் அருவியாய்,

எப்பொழுதும் புயல் என் உயிரில்(இதயத்தில்)
எப்பொழுதும் புயல் என் உயிரில்(இதயத்தில்)
இவளை (புகைப்படத்தை) கடக்கும் தருணங்கள் எல்லாம்
வேரோடு சாய்ந்த பனைமரம் நானே,
வேராரோடும் இல்லாத பந்தமோ இவளும்
என் அக்காள் வயிற்றில் உதித்த
அல்லி மலர் கொத்தின் குவியல் அழகும்,

இப்பொழுதும், எப்பொழுதும் முப்பொழுதும்
முகமலர்ந்த சிரிப்பதுவில் முழுமதியாம்,
அம்மாவின் அம்முவாம் நீயும்
அழகாய்தான் கடந்தாயோ ஒன்பது வருடம்,

அல்லித்தண்டு கால்கள் இரண்டும், பதிக்கும்
நடக்கும் முதல் நாள் இன்றும் - உனக்கும்
பிறந்தநாளோ அழகே, அழகாய் எடுத்துவை
எல்லாம் இனிதே, இனியெல்லாம் வளமே,

வாழ்கவே நீ நலமோடு, நல் குணமோடு
வாழியவே நீ பல்லாண்டு பல நூறாண்டு
போற்றும், உன் புகழ்ப்பாடும் பெயருடுக்க
அன்னையின் சொல்கேட்டு, ஐயனின் பொருள்கேட்டு
நடந்திடவே, நடந்திடுமே யாவும் நலமாய்.

வாழ்த்துகள் மாமனின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என் செல்ல மருமகளே, "3சா"

எழுத்தோலை!

No comments: