Sunday, October 26

தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தே..!

Feb 26` 2014



நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்..,

நீயே ஆசையே, என்னுள் தினம் 
அசையும் அசைவே அழகே..,
அனுதினம் ஆர்ப்பரிக்கும் அணுவே,
என்னுள் இருந்தே எனை தின்றே
எனை இயக்கும் இசையே,
இன்றெங்கே நீயும்சென்றாய் மறைந்தே..,
தேடும் திசையே மறந்தேனடி
தேகம் மெலிந்து கொடியாய் சிறுத்தேனடி
விதியே நம்மை பிரிதிடினும் - நாம்
மதி இழந்தா மயங்கி கிடந்தோம்.

நிறைவேறாத ஆசைகள் போலவே நீயும்,
நினைவில் வடித்த சிலையாய் நானும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./608111382614073/?type=3&permPage=1

No comments: