Sunday, October 26

தவமாய் பெற்ற தவப்புதல்வன்..!

Feb`13 2014


காட்சிகளை வெறும் காட்சிகளாய் 
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை,

இவன் இருந்தான் சுருள் மகிழ்ந்தது
இனி மறைந்தான் இருள் சூழ்ந்தது..,
துல்லியம் தெரியா துள்ளித்திரியும்
துணை இயக்கம் துள்ளல் முறிந்தது,

ஆசானாய் அள்ளி, அள்ளி வழங்கிய
யோசனைகளை எல்லாம் இனி யார்தருவர்..,
எங்கும் சுழலும் சுருள்சக்கரம் காட்டும்
காட்சிகளும் கசக்கும், ஒளியுகம் சிரிக்கும்,
திரையுலகு தவிக்கும், தலைமுறைகள் ஏங்கும்..,
தவமாய் பெற்ற தவப்புதல்வன் உறங்கிடவே,

காட்சிகளை உணர்ந்த என் கண்கள்
இன்று கண்ணீரை உதிர்த்தப்படி ..

காட்சிகளை வெறும் காட்சிகளாய்
காணும் கண்களும் வருந்தும்,
இனியும் ஒளி, உறையும் பனியாய்
மறைக்கும் கண்களில் உணர்சிகளை.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./600644150027463/?type=3&permPage=1

No comments: