Sunday, October 26

நெசமா யோசிக்கல ..

Mar 08` 2014



பெண்களின்றி கவிஞனும் கிடையாது, 
பெண்களின்றி கவிதையும் நமக்கேது.., 
பெண்ணும் கவிதையும் ஒன்றாம் 
பெண்ணே கவிதையே அழகாம்.

பெண்கள் தின சிறப்பு பாடல்/ கவிதை.
-----------------------------------------------------

நெசமா யோசிக்கல ...
-------------------------------

பல்லவி:

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம்:

வரப்பு வயலோரம் வாய்கா நடுவோரம்
எத்தி, எத்தி நடந்தவள ....,
சுத்தி, சுத்தி ஒளிஞ்சிருந்து ரசிச்சிருந்தேன்
கண்ணிமைக்கா மணிக்கணக்கா பார்த்திருந்தேன்..,
ஏபுள்ள எழுமிச்ச நெறமுள்ள மொசபுள்ள
ஏர் உழ மண்ணில்ல என் மனம் நீ உள்ள
மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல ...,

பல்லவி (2)

அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

சரணம் (2)

கருவேலம் காட்டுக்குள்ள குருவி சத்தம் காதினிக்க
கருவிழிக்காரி நீ சிரிக்க அத மறந்தேன்.,
நெல் கதிர் மேல கிளிகள் கூட்டம், கொஞ்சும் கீதம்
மயில் நடையா நீ வரவே கொஞ்சம் சிலிர்த்தேன்..,
வாத்துக கூட சேத்தினில் நடனம், நடவும் ரசிக்கும்
வஞ்சி நீ வந்திடவே நெஞ்சம் குளிர்ந்தேன்..,
எனை மறந்தேன், எதுவும் தோனலயே
மூளயும் யோசிக்கலயே..,
நெசமா என் மூளயும் யோசிக்கலயே..,

பல்லவி (3 )

மூள யோசிக்கல
நெசமாவே என் மூள யோசிக்கல
அடி ஆத்தி அவ அன்னக்கிளி
என்ன பாத்து போகயில
சேல நூலா தானே - மனம்
சிக்கித்தான் கிடந்திடவே
நானும் யோசிக்கல...,
நானும் யோசிக்கல...,

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613185708773307/?type=3&permPage=1

No comments: