Sunday, October 26

ஆண்டாண்டுக்கும் வியக்கும்!

17th September`2013



அழகாய் அரும்பிய அல்லிமலர் யாவும் - உன் 
அழகில் நாணி பொய்கையில் மூழ்குதே,
அரும்பி சிரித்த மல்லிகை பூவும் 
அரைநொடி தாமதமாய் இலைமறைவை நீக்குதே, 
ஆரவாரம் செய்திடும் முளரிப்பூக்களும் கூட 
அடங்கித்தான் போகுதடி அம்மணிநீ கண்ணிமைக்க,
அடியெடுத்து நடைப்பயிலும் அன்னமும்,
அணிவகுப்பில் முன்செல்லும் மயில் நடனமும்
ஆண்டாண்டுக்கும் வியக்கும், சொல்லும் உன்னழகை.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... பிரியா! 

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai

No comments: