Monday, October 27

முனிவரும் இனி..

Mar 15` 2014


கடைதெரு பிள்ளையார் கூட
கண்கள் உருட்டி பார்த்திட கூடும்,
தவத்தில் இருக்கும் முனிவரும் இனி
மௌனத்தை கலைத்திட தூண்டும்,

மேகம், மின்னல், மழை மூன்றும்
ஒன்றாய் சேர்ந்திடும், பேசிடும்....,
மோகம் மூடும், மௌனம் விலகும்
மொத்தம் அழகின் சங்கமம் உன்னில்,
முக்கூடல் சுழல் என்னில்,
அலை மோதி மீதமின்றி தொலைந்தேன்,
போடி எல்லாம் உன்னாலே
இந்நாள், நானும் இல்லாமல் போனேனே...,

கடைதெரு பிள்ளையார் கூட
கண்கள் உருட்டி பார்த்திட கூடும்,
தவத்தில் இருக்கும் முனிவரும் இனி
மௌனத்தை கலைத்திட தூண்டும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616997871725424/?type=3&permPage=1

No comments: