Sunday, October 26

பற்கள் வழி கடந்து விழும்..!

Mar 01` 2014


நற்றிணை நலம் தரும் நயமாய் 
நிதம் கேட்டிட தூண்டும் - உன் 
பற்கள் வழி கடந்து விழும் 
சொற்கள் ஒன்றும் ஒவ்வொன்றும்..,

ஒவ்வொரு மொழி அழகை மொத்தம்
கொண்டே முத்தயிதழ் வழி – காற்றில்
பரவி என் சித்தம் நனைத்து - சத்தம்
குறைத்து சலசலப்பை நிறைக்கும்..,

நிறைந்தும் நிற்காமல் நீந்தி கடந்து
நிறைமதி ஒளியாய் சிரிக்கும் – போதும்
புன்னைகை அரசியே என்னையும் விடு
விடியும்முன் விழித்துக் கொள்கிறேன். 


https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./609637789128099/?type=3&permPage=1

No comments: