Sunday, October 26

நிழல் கூட மெல்ல துரத்தும்...

Mar 04` 2014


குறுஞ்செய்தி கவிதையில் ஒன்றாய், உனக்காய் 
மொத்தமாய் மூன்றே வரியில் முடித்திட 
எத்தனித்தே எண்ணி, எண்ணி என்னையும் 
இழந்தேன் ஏழெட்டு வரிகளில்.., 

"நீ, நிஜமாய் தெரியும் வெளிச்சம் - மதி
உன்னால் தானே வானிலே நிற்கும்..,
நிழல் கூட மெல்ல துரத்தும் - உன்
அருகாமையில் அகல் விளக்கும் ஒளிர...,
ஒளி ஒளிந்துக்கொள்ளும் இடுக்கில் தொங்கல்
தொங்கும், சிணுங்கும், மினுங்கும்..,
கற்றை குழல் உரச கார்முகில்
அருகாமையில் மறைந்து சிரிக்கும்,"

குறுஞ்செய்தி கவிதையில் ஒன்றாய், உனக்காய்
மொத்தமாய் மூன்றே வரியில் முடித்திட
எத்தனித்தே எண்ணி, எண்ணி என்னையும்
இழந்தேன் ஏழெட்டு வரிகளில்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611174268974451/?type=3&permPage=1

No comments: