Sunday, October 26

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே!

Mar 04` 2014


கோடிட்ட இடத்தை நிரப்புனீர் அன்று 
பள்ளியில் புள்ளி மான்கலென..,
கேள்வியும் இதுவாய் தானே இருந்தது 
சிறுத்தையை விட வேகமாயோடும்..,

ஓடும் அதிவேகம் தாவி வளைந்து,
தன் இலக்கை தவறவிடா,
சிறுத்தையும் சிரத்தையும் எண்ணா, உண்ண
இன்னொரு உயிர் தேடலில்..,

தேடும் இடம் அடர் வனம்
அது ஒருக் காலம் - புதர்கள்,
புல்வெளிகள், வான் மறைத்த மரங்கள்
எங்கள் இனங்களின் புகலிடம்..,

புகலிடம் புது இடமாய், மாயமாய்
புது, புது வீடுகளாய் - இன்று
மரங்களை காணோம், மலைகளை காணோம்
எங்கள் சந்ததிகளும் காணோம்..,

காணாமலே இன்னும் சில காலங்களில்
நாங்களும் போய் விடுவோமோ,
நாளை பிள்ளைகளும் எங்களை எட்டில்
பார்த்தே எண்ணங்களில் மகிழ்வாரோ..,

மகிழ்வு, எங்களுக்கும் உரித்ததே உணர்வீரோ
எங்களுக்கும் உணர்வுண்டு அறிவீரோ,
நாங்களும் உயிர்களே, உறவுகளே கருணையுடன்
எங்களயும் பார்ப்பீரோ இனியேனும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./611123258979552/?type=3&permPage=1

No comments: