Sunday, October 26

ஒவ்வொன்றும் அழகோ அழகு..!

Mar 09` 2014


இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு,

கன்னம் உரசி காதினை மறைக்கும் 
உன் கார்குழல் அழகு,
செவ்விதழ் மறைக்கும் செவ்விதழ் சாயம்
சிலிர்த்திட செய்யும் அழகு,
புருவம் வளைந்து கார்முகில் ஆகவே
கச்சித பொருத்தம் அழகு,
கோதுமை நிறம் தங்கமாய் மின்னும்
தமிழச்சி உன்மேனி அழகு,

ஒவ்வொன்றாய் சொல்லிடவே ஆசையும் கூடுதே
அதற்கு என் இச்சென்மமும் போதாதே..,
இன்னும் ஏழு வேண்டுமே, மீண்டும்
மீண்டும் பிறந்து சொல்லிடவே,

இன்னதென்று என்ன நான் சொல்வது அழகே ..,
உன்னில் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./613878338704044/?type=3&permPage=1

No comments: