Sunday, October 26

வென்றிடா உறங்கோம்..!

Mar 06` 2014



தாமரை மலரும், சூரியன் உதிக்கும், 
துடைப்பம் சுத்தம் செய்யும் - இவை
மூன்றும் இலையின் கீழ் இல்லாமல் போய்விடும் - என
சூளுரைக்கும் ஆளும் கட்சிக்குமிது பொருந்தும்,

நோட்டா இரைத்தாலும் நோட்டா இருக்க
நோகாது நொங்கு திங்க இயலாது.., - இங்கு
இலையும் கிளைகளின்றி காய்ந்து உதிரும்
தாமரையும் தண்ணீரின்றி கருகி கவிழும்..,

அடிமேலடி செருப்படி வாங்கியவன் வாக்காளன்,
வக்காலத்து வாங்க, வாய்க்கு வந்த வார்த்தைகளை
வாரியிறைத்து வாக்கு சேகரிக்க வருபவன் வேட்பாளன்.,
அவனையே நம்பி குடும்பம் மறக்கும் அவனடித்தொண்டன்,

மதியிழந்து கிடந்த நாட்களும் அன்று,
விதியென்று வாழ்ந்த காலமும் சென்றது,
இனியொரு விதி செய்திட விழுந்தோம்
வீதிகளில் எங்கள் போராட்டங்களால் வென்றோம்...,

இளந்தலைமுறை மொழியின உணர்வாளர்கள் நாங்ளே,
எங்களை தட்டி எழுப்பியது என்னவோ நீங்களே.,
வெல்ல துடிப்பது எங்கள் போராடும் குனமொன்றே
வென்றிடா உறங்கோம் தழீழம் நமதே.

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612148192210392/?type=3&permPage=1

No comments: