Sunday, October 26

ஒப்பிட்டு பார்க்கவும் முடியவில்லை..!

07 Oct 2013



நிழலுலகில் வாழ்ந்திருந்தவனுக்கு நேற்றொருநாள் மட்டும்
நிலவுடன் நடக்க கிடைத்ததொரு வாய்ப்பு - இருந்தும்
தொலைவில் இருந்தே கண்களை சிமிட்டி - விடிந்ததும்
சந்திக்கலாம் என்றே சாடையில் சொல்லியதே,

எட்டியிருந்தே, கண்கள் கொட்டி பார்த்திருந்தவனாய்
நானும், விடியும்வரை காத்திருந்தும் காணவில்லை,
நிலவையும், அவளையும் அருகருகில் நிறுத்தி
ஒப்பிட்டு பார்க்கவும் முடியவில்லை, முடியவில்லை.


எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./532176530207559/?type=3&permPage=1

No comments: