Sunday, October 26

அவள் அன்னையும் செய்தது..!

Mar 14` 2014


பாம்பல்ல அதுவும்,
ஓடும் நதியுமல்ல,
நீர் திவலைகள் முளைக்கும்
மலையுச்சியும் அல்ல,
மயிர் இருக்கும் - இருந்தும் 
இல்லாதுப் போல் வழுக்கும்..,

வளைந்து, நெளிவது,
வெண்ணிலவின் தெளிவது,
தேனீக்கள் கூடது,
கிளிகளும் தேடுவது,
தொட்டால் சுடுவது,
கண்களுக்கு குளிரது,

இடையது,
என்னவள் இடையது..,
எனக்கெனவே
அவள் அன்னையும் செய்தது,
வளைவது, நெளிவது
என்னையும் வாட்டி, வதைப்பது
தொட்டால் சுருங்கும் மலரது
எனக்கு மட்டுமானது..,
இடையது, என்னவள் இடையது,
எனக்கென்றும் இனியது.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./616436948448183/?type=3&permPage=1

No comments: