Sunday, October 26

திருநாளாய் ஒருநாள் வேண்டுமென் வாழ்விலே..!

28th Sep 2013


மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே
மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே..

கலவரப்பூமியாய் என் இருதயமும் ஆனதே
கலங்கரை விளக்காய் நீ எங்கோ எரி(இரு)ந்தும்
நிலவரம் அறிந்துவர குறுஞ்செய்தித்தூது விடுத்தும்
குளக்கரை கொக்காய் காத்திருத்தலே மிச்சம்,

மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே
மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே

வெகுநாளாய் வேகிறேன் தீமூட்டியவள் நீயே
மழைநாளாய் மாறவே கேட்கிறேன் உன்னையே
திருநாளாய் ஒருநாள் வேண்டுமென் வாழ்விலே
பொன்னாளாய் அந்நாளும் ஆகுமே உன்னாலே,

மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே
மின்னலே என் கண்ணிலே பார்வையாய் உன்னையே
கொண்டேனே, கண்டேனே என் வாழ்வினில் எந்நாளுமே..

எழுத்தோலை!
https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./527659973992548/?type=3&permPage=1

No comments: