Sunday, October 26

பெண்மையை போற்றுவோம்..

Mar 08` 2014


அடக்கம், அடக்கும், ஆளுமை, அன்பும்
உணர்வும் ஒளிப்படர் மதிமுகமும் ,
ஒருங்கிணைந்த உருவம் ஓர் உருவம் 
அவள் பெண்ணெனும் தவம்.., 

தவமாய் தவமிருந்தாலும் தலைக்கீழ் நின்றாலும்
தாயாய் ஆணாக முடியாது,
அவள் வலிகள் சுமந்திட முடியாது,
அதை உணரவும் வழியேது..,

வழி போகும் வழியெல்லாம் காணும்
விழி அதுவும் காணும்,
பெண்கள் எல்லாம் பெண்கள் அல்ல
நல்ல விழிக்கொண்டு கண்டால்..,
பெற்ற தாயும், உடன் பிறந்தவளும்
உற்ற தோழியும் அவளே..,

அவளே நம் குலம் காப்பவள் ,
அவளே வணங்கும் கடவுள்,
அவளே அன்பையும், அறிவையும் கொடுத்தவள்,
அவளே பெண்ணெனும் குறள்..,

பெண்மையை போற்றுவோம்..,
கண்களாய் அவர்களை காத்திடுவோம்.

"இனிய மகளிர் தின வாழ்த்துகள்..,"
அன்பு சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும்.

எழுத்தோலை!

https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./612908152134396/?type=3&permPage=1

No comments: