Sunday, October 26

எழுவர் விடுதலை உறுதி பெரும்..!

Mar 11` 2014


சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,
சினம் கொண்டு எழும் அரிமா அடங்காது - தன்
இனம் பசித்து கிடக்கும் நிலைக் கண்டு,

அறிவால் ஒரு நிலை மேல் கொண்ட தமிழா(மனிதா),
உன்னினம் மடிந்து வீழ்ந்ததை கண்டும்,
பெண்ணினம் கர்பிழந்து உருக்குலைந்ததை கேட்டும்,
துளியும் கலங்காத உன்னிலையே துரோகம்..,

வெகுண்டெழ வேண்டாம் - நின்று
வேடிக்கைப் பார்க்காதிருந்தால் போதும்,
வெடிகுண்டுகள் வீச வேண்டாம் - நீயறிந்த
அவலங்களை நாடறிய செய்தால் போதும்,

உண்மை நிலை உலகும் அறிய,
உண்ணாநிலை போராட்டங்கள் தொடரும்
உயிரையும் பொருட்படுத்தா மாணவர்கட்கு
உறுதுணை நின்றாலே போதும்..,

தமிழ் வெல்லும், தமிழீழமும் பிறக்கும்
எழுவர் விடுதலை உறுதி பெரும்.

எழுத்தோலை!
 https://www.facebook.com/ezutholai/photos/pb.113174942107722.-2207520000.1414303665./614822355276309/?type=3&permPage=1

No comments: