Wednesday, July 24

எனக்குள், ஒரு மின்னல், ஒரு மழை...


May`31



வாய்வரை வந்த வார்த்தை - ஏனோ
வழித்தவறிப் போனதடி,
எல்லாம் உன்னாலே கண்ணே,
எல்லாம் உன்னாலே,

எனக்குள்,
ஒரு மின்னல்,
ஒரு மழை,
புது வெள்ளம் எல்லாம்
தன்னாலே தோன்றி
தன்னாலே மறையுதே என் முன்னே,

ஒரு சொல், ஈருயிரை
ஓருடலாய் இணைக்கும் என்றால்,
அச்சொல் சொல்வதில் - அச்சமில்லை,
அச்சமில்லை அச்சமென்பதில்லையே,

சொல்லவா, சொல்லாமல் செல்லவா
சொல்லிவிட்டு ஏதும் கேட்காமல் போனால்
சொல்லும், கொள்ளும் என்னை என்றே
சொல்லிவிட முனைந்தே, முடியாமல் தவிக்கிறேன்.

எழுத்தோலை!

No comments: