Wednesday, July 24

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் எனில்...


May`08

அனாதைகள் கடவுளின் 
குழந்தைகள் எனில் - கடவுளை 
முச்சந்தியில் நிறுத்தி, கற்களால் 
அடித்துக் கொல்லவேண்டும்.. (பகுதி -1)
-------------------------------------------

காதலின் கொடுமையும்,
காதலின் கொடுமையும், 
காமத்தின் மிச்சமோ,
உச்சத்திற்கு அழைத்துப்போக
கபட மொழி பேசி - மிச்சமேதுமின்றி
மொத்தமும் முடியுமோ,
காதலின் கொடுமையும்,
காதலின் கொடுமையும்,
காமத்தின் மிச்சமோ,
கயமையின் மொத்தமா,

கண் மறைத்து, கதைத்துப் பேசி
கனிமொழி உதிர்த்து - ஊர்
முழுதும் சுற்றி,
இனிக்க, இனிக்க பொய்யுரைத்து,
புதுமொழி வாக்குறுதிகள் கொடுத்து,
பெண்ணையும் - அவளின்
அங்கங்களையும் - அணு
அணுவாய் ரசித்து, ருசித்து,
புணர்ந்து - எல்லாம்
முடிந்ததுப்போல் களைத்து,
இரவைக் கழித்து, காலையில்
எதுவும் நடக்காதுப்போல்
தன்மானமும் இன்றி - மன்னிப்புக்
கேட்டு,
மனதை மாற்றும் - காமக்
கயவர்களின் கருணையே,

ஆங்காங்கே அனாதைகளாய்
அன்னைத் தந்தைப்
பெயரக்கூட தெரியாது,
ஆசிரமங்களை நிறைக்கும்
ஆலமர விழுதுகள்,

ஆங்காங்கே அனாதைகளாய்
அன்னைத் தந்தைப்
பெயரக்கூட தெரியாது,
ஆசிரமங்களை நிறைக்கும்
ஆலமர விழுதுகள்,

காதலின் கொடுமையும்,
காதலின் கொடுமையும்,
காமத்தின் மிச்சமோ,
உச்சத்திற்கு அழைத்துப்போக
கபட மொழி பேசி - மிச்சமேதுமின்றி
மொத்தமும் முடியுமோ,
காதலின் கொடுமையும்,
காதலின் கொடுமையும்,
காமத்தின் மிச்சமோ,
கயமையின் மொத்தமா.


எழுத்தோலை!

No comments: