Wednesday, July 24

நான் இங்கு தவிக்கிறேன்..


அன்பாய் பழக,
செல்லமாய் வருட,
உள்ளங்கையில் முடக்க நினைத்த
பட்டாம்பூச்சி,
உதறிக்கொண்டு பறந்ததடி,
இறக்கைகள் மேல் தடவிய
வர்ணங்கள் மட்டும் - என்
உள்ளங்கையில் உலர்ந்ததடி,

நீ பட்டாம்பூச்சியா - இல்லை
படைத்தவன் காட்சியா?
புரியாமல், புலம்பியப்படி - நான்
இங்கு தவிக்கிறேன்.

எழுத்தோலை!

No comments: