Wednesday, July 24

நான்கும் கலந்த காதலன்..


May`07

சொல்லாமல் போன காதல் எல்லாம் 
சொற்கள் இழந்தே திரியட்டும்,
தெரியாமல் மறைத்த காதல் எல்லாம் 
தெளிவில்லாத மேகமாய் அலையட்டும்,
சொல்லியும் புரியாத காதல் எல்லாம் 
சோகத்தை சுமந்தே மிதக்கட்டும்,
கனவில் திளைத்தக் காதல் எல்லாம் 
கனவைக் கொன்று தின்னட்டும்,
நான், 
நான்கும் கலந்த காதலன்,
நாலு வரி எழுதிவிட்டு போகிறேன்.


எழுத்தோலை!

No comments: