Wednesday, July 24

இனிக்கும் தங்கமே...


May`18

சில்லென்ற மழையும் மழலையாய் 
குறைமாத கருவாய் - எனக்கென்றே
செல்லமாய் பிறந்ததிங்கே,
சின்னுவென்று உன்னை அழைக்க 
மின்னுகின்ற பூவாய் கைகள் விரித்து - நீ,
ம்மா, ம்மா என்றழைக்கும் அழைப்பை
கேட்கும் நேரமே என்னையும் நானே 
மறந்துப் போகிறேன்...
பவ்யு சொல்லி பவ்யமாய் என்னை 
ஆட்க்கொள்ளும் அழகியப் பனிப்பூவே
நீ - நாளை வரும் நாளை எண்ணி
இப்பொழுதே உறக்கம் துறக்கிறேன்.


சின்னுவே, நீயும் என் செல்லமே - என்றும்
எனக்கு வெள்ளமாய் இனிக்கும் தங்கமே.

எழுத்தோலை!

No comments: