Wednesday, July 24

கவிதையிடமே கேட்டேன் !




May`02

---------------------------------------

கவிதையிடமே கேட்டேன் 
கவிதை சொல்ல சொல்லி, 
கண்கள் இமைத்து சிரித்து,
இதழ்கள் விரித்து சொன்னாள்,

எனக்கென்று ஒரு கவிதை
யாரும் எழுதிடாப் போதிலும்,
எனக்கென்றே பிறந்தவள் அவளும்
எழுதி நீட்டிச் சென்றாள்,
செந்தமிழில்
தேன்க் கவிதை,

பார்த்தேன் படித்தேன்,
வியப்பில் புதைந்தேன்,
புல்லரித்துப் போனேன்,
வான்வெளியில் மிதந்தேன்,

எனை சித்தரித்த வரிகள்
சொல்லும் அதன் பொருள்கள்,
அவள் உள்ள உணர்வுகள் - எல்லாம்
எத்தனை வலிமை, எத்தனை புதுமை,

அதிர்ந்தேன், வியந்தேன், சிரித்தேன்,
வானைத் தொட்டு பூமியில் விழுந்தேன்,
விழுந்த இடத்தில் என் உடல் மட்டுமே
மற்றவை எல்லாம் அவளிடம் பத்திரமே.



#எழுத்தோலை!

No comments: