Wednesday, July 24

அறிய எப்படி தவிர்த்தாய்...


May`24

நாட்குறிப்புகள் எழுதத் தொடங்கிவிட்டேன்,
நாட்குறிப்புகள் எழுதத் தொடங்கிவிட்டேன் நானும்,
என்றுனைக் கண்டேனோ 
அந்த நாள் முதல் 
இந்த நாள் வரை - நித்தம், நித்தம் 
கவிதைகள் எனும்ப் பெயரில் 
ஏதேதோ கிறுக்கி என் நாட்குறிப்பை 
நிரப்புகிறேன்,

நீயும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே
காற்றில் பறக்கவிடுகிறேன்,
கணினி வாயிலாய்
எழுத்தோலை எனும்ப் பெயரில் - நீயோ
பார்த்தாய், படித்தாய், ரசித்தாய் - பின்பு
எப்படி என்னை அறிய தவிர்த்தாய்,

எழுதியதெல்லாம் எழுத்துக்களாக தெரிந்ததோ
உனக்கும், மற்றவர்க்கெப்படியோ போகட்டும்,
என் எண்ணங்கள் ஒன்றுமா - இன்னும்
புரியவில்லை உனக்கு?

உலகமே அறிந்தவளே - என்னை
அறிய எப்படி தவிர்த்தாய்.


எழுத்தோலை!

No comments: