Wednesday, July 24

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா.......,


May`09

கவியரசு கண்ணதாசன் அவர்களின் "நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா......." என்னும் பாடலின் முதல் வரிகளை தழுவி எனது வரிகள்...
இதோ! 
---------------------------------------------------

"நினைக்க தெரிந்த மனமே உனக்கு...."
----------------------------------------------------

நினைக்க தெரிந்த மனமே உனக்கு
மறக்க தெரியாதா.......,
நினைவு இழந்த பொழுதில் எதற்கு
பழைய கனவு இனியும்..,
எதற்கு.., பழைய கனவு இனியும்...,
நினைக்க தெரிந்த மனமே உனக்கு
மறக்க தெரியாதா.......,
நினைவு இழந்த பொழுதில் எதற்கு
பழைய கனவு இனியும்..,
எதற்கு.., பழைய கனவு இனியும்...,

பரிவு அற்ற இதயம் எவர்க்கு
மயங்கும் புரியாதா..,
உயிரும் இல்லா உறவும் கடலாய்
துன்பம் சேர்க்காதா ...,
கடிதம், கவிதை வடிவில் - என்
மனதை படித்த உனக்கு,
துளியும் இறக்கம் துளிர்க்க - எப்படி
மறுத்தது இதயம்,
துளியும் இறக்கம் துளிர்க்க - எப்படி
மறுத்தது உன் இதயம்,

நினைக்க தெரிந்த மனமே உனக்கு
மறக்க தெரியாதா.......,
நினைவு இழந்த பொழுதில் எதற்கு
பழைய கனவு இனியும்..,
எதற்கு.., பழைய கனவு இனியும்...,

நிலவு உலவும் பொழுதில் தினமும்
கதைகள் கதைத்து சிரித்தோம்,
நிறைவு என்ற சொல்லை வெறுத்தே
மணியும் மாற்றி வைத்தோம்,
கனவு என்னும் உலகில் நானும்
பறக்க தொடங்கும் பொழுதே,
பறித்து சென்று விட்டாய்- வெட்டிய
என் இறக்கை என்னும் மனதை,
பறித்து சென்று விட்டாய்- வெட்டிய
என் இறக்கை என்னும் மனதை...,

நினைக்க தெரிந்த மனமே உனக்கு
மறக்க தெரியாதா.......,
நினைவு இழந்த பொழுதில் எதற்கு
பழைய கனவு இனியும்..,
எதற்கு.., பழைய கனவு இனியும்...,
நினைக்க தெரிந்த மனமே உனக்கு
மறக்க தெரியாதா.......,
நினைவு இழந்த பொழுதில் எதற்கு
பழைய கனவு இனியும்..,
எதற்கு.., பழைய கனவு இனியும்...,


எழுத்தோலை!

No comments: