Wednesday, July 24

கொலுசே கொலுசே...



May`29

அவள் கணுக்கால் அதனை சுற்றிய 
வெள்ளிக் கொலுசிடம் ஓர் கோரிக்கை,

ஜல்லென்று சொல்லும் ஜதிப் போலே,
நதி மீது மிதக்கும் சருகாக, 
மதிப்போல வருடும் ஒளியாக, 
மெத்தைப்போல் நடக்கும் அவள் பாதங்கள் 
என் மார்பினில் பதிந்து கடந்திடவே, 
உன் சார்பினில் கோரிக்கை விடுக்கிறேன் ,
நான் இருந்தாலும், இறந்தாலும் சென்றடையும்
சொர்கத்தின் வசம் கிட்டும் மோட்சமும்,
இப்பொழுதே, இக்கணமே கேட்கிறேன்.

அவளிடம் சொல்வாயோ
அவள் வசம் சேர்ப்பாயோ
கொலுசே, கொலுசே..- வெள்ளிக்
கொலுசே கொலுசே.


எழுத்தோலை!

No comments: