Wednesday, July 24

கனவே கலையாதே...


May`24

அரவணைக்கும் என் - இருக் 
கைகள் இருந்தும் - உன்னருகில் 
நான் இல்லையடி என்செய்வேன்,
தொலைவில் இருந்தே - உன் 
கண்களை வருடுகிறேன்,
இதமா என்பதை - பதம் 
பார்த்த நீயே சொல்லிவிடு,
நிதமும் கிடைக்கும் நிச்சயமாய்
இதம் தரும் என் விரல்களின் 
வருடல்கள்,
என்றென்றும் என்னுயிர்
உள்ளவரை,

கனவே கலையாதே...

எழுத்தோலை!

No comments: