Wednesday, July 24

நெத்திலி கருவாட்டுக் குழம்பு..


May`31

நேற்றைய மாலைப் பொழுதும் 
நேரலை காட்டிக் சென்றது,
நீ - மணக்க கொதிக்க விட்ட - நெத்திலி 
கருவாட்டுக் குழம்பு,

எட்டு ஊரை கடந்து 
எங்கள் தெருவில் மணக்குதடி 
உன் கைப் பக்குவ அழகில் - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

கண்ட நேரத்திலே
நாவும் நீரை இறைக்க - உண்ண
என்னை தூண்டுதே, நீ வைத்த - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

என்றுனை சேர்வேனோ
அந்நாளில் எல்லாம் சாத்தியமே - உண்டு
களித்து உளம் மகிழவைக்கும் - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

கனவெல்லாம், உன் கைப்பிடி பிடித்தே,
ஒருருண்டை எனக்கூட்டும், உன்
விரல் ஸ்பரிச வாசம் கூட்டும் - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,

நேற்றைய மாலைப் பொழுதும்
நேரலை காட்டிக் சென்றது,
நீ - மணக்க கொதிக்க விட்ட - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு,
நீ - மணக்க கொதிக்க விட்ட - நெத்திலி
கருவாட்டுக் குழம்பு.

எழுத்தோலை!

No comments: