Wednesday, July 24

தொப்புழ்க் கொடி உறவு...


May`07

தொப்புழ்க் கொடி உறவும் இல்லை 
தப்பி, பிறந்துவிட்டோம்,
இரத்த பந்த சொந்தம் இல்லை 
நகமும், சதையுமாய் ஆகிப் போனோம்,

தமக்கையே,
உலகையே காக்கும் உமையே,
உனையே என்றும் தொழுவேன்,
எனையும் காத்து - எனக்காக
தரைத் தாழ்ந்து, இறங்கி, உருகி
உருகா மனதையும் பனியாய்
உருக்கிட முனைந்து - முழுதாய்
என்னை, உனையே என்றும்,
எங்கும் என் அன்னை என்று
சொல்லும் - உணர்வினை,
வலுவாய்
உயிரூட்டினாய்,

தொப்புழ்க் கொடி உறவும் இல்லை
தப்பி, பிறந்துவிட்டோம்,
இரத்த பந்த சொந்தம் இல்லை
நகமும், சதையுமாய் ஆகிப் போனோம்,
நீயே, இனி எல்லாமே எனக்கும்,
என்றென்றும்.

உமை: உமையாள் / உமா (பார்வதி)

எழுத்தோலை!

No comments: