Wednesday, July 24

நானும், ஒ நாயுமாய்...


May`29

பின்னிரவு ஜாமத்தில் 
ஐந்தறிவு ஒ நாயைப்போல் 
ஓலைமிட்டப்படி ஓடோடி 
அலைகிறேன், 

அவள்,
கால் நகங்கள் கண்ட என் கண்கள்,
அதன் சிவந்த நிறங்களில் நனைந்து 
நகச்சாய வண்ணத்தில் நுழைந்து, 
சுண்டுவிரல் தொட்டு, கட்டை விரல்வரை
முத்தங்களை முன்னிறுத்தி - சத்தமும்
இல்லாமலே சலங்கை ஒலி
சத்தங்களை எழுப்பி - சிலுப்பிக்
கொண்டு ஓடும் மீனாய் நழுவி
மீண்டும் முத்தக்கணக்கை
மணிக்கணக்கில் தொடர்ந்திடும் நேரமும்,

நானும், ஒ நாயுமாய் ஓலங்களை
எழுப்பி உற்சாகத்தில் திளைப்பேனோ.


எழுத்தோலை!

No comments: