Wednesday, July 24

முரண்டுப்பிடிக்கும்...

May`09

உன்னை நினைக்காமல் நொடிப்பொழுதும் 
மரிக்காதுப் பெண்ணே எனக்கும் - செரிக்காத 
உணவைப்போல் எனை ஏனோ, கக்கிவிட 
எத்தனித்து விக்கி நிற்கிறாய்,

அவதானித்து அமைதியாய் அளந்துப்பார்,
அரைநொடிக் கொருமுறை மணியடிக்கும் 
என் எண்ண அலைகள் எல்லாம் அப்படியே 
என்னைப்போல் உன்னுள் முரண்டுப்பிடிக்கும்.

எழுத்தோலை!

No comments: