Wednesday, July 24

எல்லாம் மறைந்ததே...


May`10

கண்களே... நீ கண்டதென்னவோ 
தென்றலாய் அவள் வந்து சென்றதே,
இன்னும் ஏனோ நீ தேடி தேய்கிறாய்
காற்றையும் காண இயலுமோ,
நிமிடங்கள் வீசி சென்றதும்,
சொர்கமும் பக்கம் வந்ததும்
தேவதையவள் இன்று போனதும் 
எல்லாம் மறைந்ததே,
தேவதையவள் இன்று போனதும் 
எல்லாம் மறைந்ததே...

(கண்களே... நீ கண்டதென்னவோ..)

கண்களுக்குள் காட்சியாக
நின்று கொண்டவள் - அவள்
கண்கள் கொண்டே எப்பொழுதும்
என்னை வென்றவள்....,
கண்களுக்குள் காட்சியாக
நின்று கொண்டவள் - அவள்
கண்கள் கொண்டே எப்பொழுதும்
என்னை வென்றவள்....,
கவரிமானும் துணையை இழக்க
துடித்து இறக்குமே - நானும்
கவரிமானாய், கவிதை தானே
எழுதி இருக்கிறேன்,
கண்களுக்குள் குளங்கள் கட்டி
நீந்தி திரிகிறேன் - உன்
கண்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்..,

(கண்களே... நீ கண்டதென்னவோ...)

நித்தமுனை காண காத்திருக்கும் பக்தனிவனிடம்
இன்னும் என்ன தயக்கம், போதும் போதும் நில்லடி,
நித்தமுனை காண காத்திருக்கும் பக்தனிவனிடம்
இன்னும் என்ன தயக்கம், போதும் போதும் நில்லடி,
கடிகார முற்களை முந்தி சுழல்பவனிடம்
கணநேரம் நின்று பேசிட, மோதும் மோதும் இதயமே,
காத்திருக்கும் என் ஐந்துப்புலனும் காத்திருக்குமே,
உன் ஒற்றை சொல்லும் உதிரும் வரை காத்திருக்குமே,
கண்களுக்குள் குளங்கள் கட்டி
நீந்தி திரிகிறேன் - உன்
கண்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்..,

கண்களே.... நீ கண்டதென்னவோ
தென்றலாய் அவள் வந்து சென்றதே,
இன்னும் ஏனோ நீ தேடி தேய்கிறாய்
காற்றையும் காண இயலுமோ,
நிமிடங்கள் வீசி சென்றதும்,
சொர்கமும் பக்கம் வந்ததும்
தேவதையவள் இன்று போனதும்
எல்லாம் மறைந்ததே,
தேவதையவள் இன்று போனதும்
எல்லாம் மறைந்ததே...


எழுத்தோலை!

No comments: