Friday, July 20

உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்....


சிரு பொன்மனி அசையும் அதில் தெரிக்கும் புது இசையும்....
என்கிற கல்லுக்குள் ஈரம் படத்தின் பாடல் மெட்டிற்கு பொருந்துமாறு எழுதும் முனைப்பில்,
எனது பாடல் வரிகள் இதோ...

----------
உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்
நான் கிடப்பேன் ராப்பொழுதும், பகல்முழுதும்,
ரசிப்பேன், துடிப்பேன், நடிப்பேன் இருந்தும்
தீராது என் மோகமது உனைசேராது, 

(உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள் ....)

உன் கண்களில் நீ சொல்வது தான், கேட்பது
நான், தீரா பிழைப்போ, கொடுப்பும் எதற்கோ?
நம் இருவரின் இதயமும் துடிப்பது நிற்காமலே,
நீங்காமலே நிதமும் பிறக்கும், நீ என் பொன்வசந்தம்,
இலையசையும், பனி துளி சிதறும், என் மேல் படரும்,
கொடிப்போல் வழியும், கைகளது துடைக்கும், நிற்கும்,

(உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்.....)

மறுபடி ஒருமுறை உன்னை பார்த்திட,
வழியும் மோகம், வேண்டாம் தாபம்,
பொன்மேனியது குளிர்ப் போல் நடுங்கும்,
நா வறண்டு மீண்டும் தாகம் எடுக்கும்,
கண்மணி ஒரு அடி தள்ளியே நில்லடி,
எனக்குள் ஒரு திருடன் உன்னை,
துருவி வருடிட துடிப்பதை உணர்கிறேன்...

உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்
நான் கிடப்பேன் ராப்பொழுதும், பகல்முழுதும்,
ரசிப்பேன், துடிப்பேன், நடிப்பேன் இருந்தும்
தீராது என் மோகமது உனைசேராது,

(
உன்னிதழ் அது கொடுக்கும் தேன் சுவைக்குள்.....)


- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
 
Photo Courtesy: Negis Art!

No comments: