Friday, July 27

காசு!


ஒன்றரை வயது குழந்தைப்போல்,
ஓடியாட முடியாமல், ஓய்வும் இல்லாமல்,
ஓடி ஓடி தேடுகிறேன் பணத்தை,
கோடி கோடியாய், இல்லையென்றாலும்,
ஆயிரத்தில் வந்து, வந்த சற்று நொடிக்குள்,
காற்றைப்போல் திசைமாறி, வந்தவழியே,
கையில் ஒட்டா ஒற்றை நயா பைசாவாய்,
ஓட்டம் பிடிக்கிறது, என்ன வெறுப்போ என்மேல்

காசுக்கு?

புதுசாய் வாசமடிக்கிறது, மண்வாசனையா?
பணவாசனையா? காற்றடிப்பதாலோ ? - இந்த
முறையேனும் கதவை சாத்திவைப்பேனோ?



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: