Wednesday, July 25

பேசும் ஓவியம்




மௌனம் கலைந்திருந்த,
மேகமாய் கார்வண்ணம்,
உன்க்கூந்தல் காற்றில் பறந்திட,
அதைக்கோதும் உன்விரலினிலே,
வண்ணம் தோய்த்து வரைந்திட்ட
ஓவியமாய் உன் முகம், பேசிடும்
பெண் சிலையாய் என்னிடம் பேச,
எதோ பேச நானும் இசைந்தேன்,
இளையவளே, இம்சை செய்வதை
நிறுத்துக் கொஞ்சம், உன் கண்ணசைவில்
கரைந்துபோகும் மண் சிலையாய்,
உன் இதழசைவின் கோணம் கண்டு
இன்பமும், துன்பமும் இரண்டுமே
நீயென, நினைவில் நிறைந்து,
நிதம்நிதம் கனவில் திளைக்கிறேன்.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -
 
Photo Courtesy: Google!

No comments: