Tuesday, July 10

கனவு போன்று இருக்குதடி!



கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்.

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரைமணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி.

கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்,
கனவு போன்று இருக்குதடி.......,

கல்வி பயின்ற நாட்கள் அன்று,
கதைத்து சிரித்த நொடிகள் தொலைத்து,
சேர்ந்து நடந்த தெருக்கள் மறந்து,
அன்பாய் கொடுத்த முத்தமும் காய்ந்து,
மொத்தமாய் தொலைந்தே போனதடி,

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி,
கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்..

அன்பிற்கு இலக்கணம் எதுவென்றால்,
உன்னையே உரக்க சொல்லுவேன்,
பெற்றவர், உற்றவர், நண்பர்கள்,
இவர்களே உலகமோ உனக்குமடி,
தோழியே, தங்கையே, தேவதையே,
தங்க ரதம் சுமந்துவரும் உற்சவமே,
உனையே சுற்றிவந்து வரம்க்கேட்கிறேன்,
உன் பிறந்தநாளில் இன்று - என்றுமே
எனைப்பிரியா வரமொன்றை தருவாயோயடி?
எப்பொழுதும் எனை பிரியா இருப்பாயோயடி?

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி,
கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்..

மலர்ந்து, மணம் சுமந்து, சிரிக்கும்
பூவே உனக்கு, பிறந்தநாள் இன்று,
வாழ்த்துகள், என்னினிய வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்களுடன் அக்கறையும் இருக்குதடி,
வயதொன்று கூடியதை கூர்ந்தாயோ?
வாழ்க்கைக்கு துணையொன்று வேண்டாமோ?
என் வாய்மொழி கேட்பையோ, காயத்ரி?
இனியும், காலம் தாழ்த்தாதே,
உனக்காய் ஒரு உலகம்,
உலகமாய் ஒரு துணையும்,
பெற்று பெருவாழ்வு வாழ்த்திட,
எனக்கும் ஆசையாய் இருக்குதடி,
வாழ்த்துக்கள் மறுபடியும்,
என் வார்த்தைகள் உயிர் பெற்றிட,
வாழ்த்துகள், வாழ்த்துகள் - என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காற்றிடம் கேட்கிறேன்,
கவிதையாய் உரைக்கிறேன்,
கடற்க்கரை மணலாய் - நம்
கால்த்தடம் மறைந்தே போனதடி,

கனவு போன்று இருக்குதடி
கடந்து வந்த பொழுதுகள் எல்லாம்.


::: கோ.இராம்குமார்  :::

No comments: