Wednesday, July 18

அமாவாசை!



அவள் இதழ்ச்சாயம் - என்
இதழுடன் பூச முனைந்து
அவளிதழ் திசையில்,
என் முகம் திரும்பி,
செவி சுருக்கி, கண்மூடி,
நெஞ்சுப்படப்படக்க, நெருங்குகையில்,
ஒரு நிழல்க்கண்டு அதிர்ந்தேனே,
அது சுழல்ப்போல என்னைச்சுற்ற,
தணல் குறைந்த புகைப்படலமாய்,
என்னிமை புகுந்து, கண்ணிமைக்கும்
பொழுதில் மாயமாய் போனதே,
கைம்பெண் அவளின் கணவனோ,
அவனும் அலகையோ!

குழப்பம் படர்ந்த நெஞ்சுடன் - இறுக
பற்றிய கை விலக்கி, விலகி கிடந்தப்பா
வாடை சரிசெய்து, மாட்ட மறந்த
கொக்கி மாட்டிவிட்டு, கலைந்திருந்த
கொசுவமடிப்பை அடுக்க மடித்து,
ஆசை தீயை தண்ணீர்
குடித்து
அணைத்து சென்றேன்.

அன்றைய இரவும், அமாவாசையோ!
 











- எழுத்தோலை கோ.இராம்குமார் -






Photo Courtesy: Negis Art!




No comments: