Thursday, July 26

ஓம் நமசிவாயா! ஓம் நமசிவாயா!!


ஒற்றைக்கல் கோபுரமாய்,
ஒருபக்கமும் நிழல்சரியா,
ஆயிரம் ஆண்டுக்காலங்கள்,
வாழ்ந்திட ஆசை, பேராசை,
என்னை செதுக்க ஒரு சோழன்,
இல்லையே பிரகதீஸ்வரா,
ஏழை என், கோரிக்கையெல்லாம்,
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திட அல்ல,
அடுத்த நொடியை கடந்திடவே,

சிவ, சிவ சிவக்கும் கண்களுடன்,
துடிக்கும் என் நெஞ்சமும்,
நொடிக்கும் நாளில் எல்லாம்,
நினைக்கும் உன் பெயரை,
நொடிக்கு ஒரு முறை துதித்தாலும்,
திரும்பா உன்னருள் ததும்பா,
திகைத்து நிற்கிறேன் நிர்க்கதியாய்,
உன் வாசலில்,

நெற்றிக்கண் திறக்க வேண்டாம்,
உன் ஓரக்கண் பார்வையே போதும்,

ஓம் நமசிவாயா! ஓம் நமசிவாயா!!


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: