Friday, July 27

முற்று!


காதல் கவிதை எழுத ஏனோ
எண்ணம் வரவில்லை சில காலமாய்,
காதலிக்க யாரும், இல்லை என்பதாலா,
பழைய காதல், பாழாய்ப்போனதாலா,
பசுமை கருகும் பருவம் பக்குவமானதாலா,
எதனால் என்று என்னிடமே கேட்கிறேன்,
விளங்கா மௌனமே மிச்சம்.

என்னைக்கடந்து போனதொரு காற்றாய்,
காதலும் என் இதயமும் அதன் மௌனமும்,
முற்றும்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: