Monday, July 23

நாடோடி!


நாடி, நாடி நானுமானேனோ நாடோடி,
வீடோடோடி, கடோடோடி கடைசியாய்,
விற்காமல் நின்ற விறகாய் மாறி,
அதை எரிக்க கிடைக்கும் கரியாய் கருகி,
அதை பொடிக்க பறக்கும் கரும்புகையாய் பரவி,
அது கலக்கும் காற்றாய் கண்ணை விட்டே மறைவேனோ,

மறுஜென்மம் என்றொன்றிருந்தால் அதிலும் -
இதுவோ, மறுபடியும்!



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: