Sunday, July 22

பூஜைகேத்த பூத்தேடி!

 
 
காற்றோடு மிதக்கும் இலையாய்,
என் கண்ணோடு மிதக்கும் உன் நிழலாலே,
பெண்ணோடு உன்னை ஒப்பிட முடியவில்லை,
தேவதைகள் கூட்டத்திற்கு தலைமை நீ தங்குவதால்,
உன்னோடு உன்னையே ஒப்பிட்டு பார்க்கிறேன்,
உன்னைவிட அழகிய பெண்ணில்லை என்பதால்,

அழகிய அற்புதமே, ஆயிரம் பூக்களின் அர்த்தமே,
இருட்டில் தேடிய மெழுகுவர்த்தியாய் முழிப்பிதுங்கி,
தடவி, தடவிப் பார்க்கிறேன், தாவணி குமரி உன்
தேகமும் மெழுகினால் செய்ததோ என்னவோ?
இத்தனை வழுக்கல்கள், எத்தனை சறுக்கல்கள்,
சலவைக்கல் சலவையாய் என்னுள் சலசலப்பு சத்தமே,
மெல்லிய சலனமாய் கேட்கிறதே,

ஓடையாய் ஓடி ஒரு நிமிடமும் நில்லாது,
உன் நிலலதுப்போல் தொடர்கிறேன்,
ஓரக்கண் பார்வை வீசு, ஓரமாய் நின்னு பேசு,
பேருலகம் போல் உனையே நிற்காமல் சுழல்கிறேன்,
இருண்டு ஒளிவீசும் பகலிரவு கணக்காய்,
பசித்தூக்கம் மறந்து, பூஜைக்காய் காத்திருக்கும்
கடவுளைப்போல, கடவுளுக்காய் காத்திருக்கும்
பக்கதன் நானே!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: